செயற்கை நுண்ணறிவு!
- melbournesivastori
- Sep 28, 2021
- 7 min read
Updated: Oct 18, 2024

வருவதை தடுக்க முடியாது,
தடம் இருந்தாலும் தப்பிக்க
முடியாது!
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்த ஏலியன் UFO விபத்து நடந்தது ஜூலை 8, 1947 ஆம் ஆண்டு.

இது நடந்தது அமெரிக்காவிலுள்ள ராஸ்வெல் எனப்படும் இடத்தில். விபத்து நடந்த இடம் ஆள் அரவமற்ற இடமாக இருந்தாலும் நடந்தபோது பெரிய வெடி வெடித்தது போன்ற சத்ததால் அருகில் இருந்த ஒரு விவசாயி அதை காணச்சென்று அப்பகுதியின் ராணுவ அதிகாரிக்கு தெரிவித்து, ஏலியனின் பறக்கும் தட்டு விபத்துக்குள்ளாகியுள்ளது என்று அறிவிக்க அது பத்திரிகை செய்தியாகவும் வெளிவந்ததின் படம் தான் மேல் உள்ளது.
விபத்திலிருந்து சுமார் மூன்றில் இருந்து நான்கு அடி உயரமுள்ள 5 இறந்து கிடந்த ஏலியன் உடல்களை மீட்டு எடுத்ததாகவும் அந்தப் பறக்கும் தட்டையும் அகற்றி கைப்பற்றி அருகிலுள்ள விமானப்படையின் பாதுகாப்பு பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் வாய்வழி செவிவழிச் செய்திகள். ஆனால் இவையெல்லாம் ராணுவ ரகசியமாக கட்டளையிடப்பட்டு மறுநாளே இது போன்று எதுவும் நடக்கவில்லை என்று அறிவுறுத்தப்பட்டது. அதுவே கடைசி செய்தியாகவும் முடிந்தது.

இராணுவ கட்டுப்பாட்டிற்கு விபத்து நடந்த இடமும் அங்கு வசிக்கும் மக்களும் அன்றைய தினமே வந்தனர். சுமார் எழுபத்தி நான்கு ஆண்டுகளுக்கு பிறகும் ரகசியம் காக்கப்பட்டது… அது UFO இல்லை வெதர் பலூன் எனப்படும் காலநிலை கண்காணிக்க பயன்படும் பலூன் என்று விளக்கம் கொடுக்கப்பட்டது… அப்போது எல்லோர் மனதிலும் எழுந்த கேள்வி மிகத் திறமை வாய்ந்த ராணுவ அதிகாரிகளுக்கு பலூனுக்கும் வித்தியாசமான வின்களத்திற்கும் வித்தியாசம் தெரியாமலா போயிருக்கும்…. இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் கசியவிட்ட ரகசியத்தில் இருந்து தெரிந்தது உலக மக்களினுடைய மத நம்பிக்கை தகர்ந்து விடும் என்பதனால் அது மூடி மறைக்கப்பட்டது என்று கூறப்பட்டது.. ஆனால் கசிந்த ரகசியமோ அதுமட்டுமல்லாமல் அதிகாரத்தையும், பணபலத்தையும் ஒரு சிறிய செல்வாக்குமிக்க கும்பல் தக்கவைத்துக்கொள்ளவே அந்த ரகசியம் காக்கப்பட்டது என்று கூறப்படுகிறது… ஆனால் சென்ற வருட கடைசியில் டிசம்பர் 2020யில் ஹைம் எஷேட் எனும் இஸ்ரேலின் முன்னாள் ராணுவ பாதுகாப்பு புலனாய்வு தலைவர் கொடுத்த பேட்டி இவைகளையெல்லாம் புறம் தள்ளி புரட்டிப்போட்டது, அதாவது ஏலியன்கள் இருப்பதுவும், வந்து செல்வதும், பூமியின் அரசாங்கத்துடன் தொடர்பில் இருப்பதுவும் இது முன்னைய ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் வரை எல்லோருக்கும் தெரியும் என்றும் கூறினார்… அதுமட்டுமில்லாமல் ஏலியன் தொடர்பு ராணுவ ரகசியமாக பாதுகாக்கப்பட்டது முந்தைய கூறிய காரணங்களால் இருந்தாலும் இப்போது இவர் கூறுவது ஏலியன்கள் கேட்டுக்கொண்டதன் படியே மனிதர்கள் இந்த மாற்றத்தையும் பிரபஞ்சத்தில் எல்லா இடத்திலும் உயிரினங்கள் வாழும், வாழ முடியும் என்ற கருத்தை உள்வாங்கி பக்குவபட்டால் மட்டுமே எங்களின் இந்த தொடர்பை நீங்கள் பகிரங்கமாக அறிவிக்கலாம் என்று கூறியதாக தெரிவித்தது… ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இதில் ஈடுபாடு உள்ளவர்களின் மத்தியில் பெரும் புயலைக் கிளப்பியது. பொது ஜன… ஜனரங்க தொலைக்காட்சிகளில் இது வராது… தொண்ணூற்று ஒன்பது சதவிகித மக்களுக்கு இது ஒரு செய்தியே அல்ல… சிறு சதவிகித மக்களால் புரிந்து கொள்ளப்படும் இந்த செய்தி உலகத்தை ஆட்டிப்படைக்கும் போதும் அந்தப் பெரும்பான்மையினருக்கு இது பாதிப்பையும், மாற்றத்தையும் ஏற்படுத்தாது…. நமது தற்காலத்திய மனித கட்டமைப்புகள் அவ்வாறு.
பிளிப் கார்சோ என்பவர் 1942ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தார், 1945ஆம் ஆண்டு ஐரோப்பாவில் அமெரிக்க ராணுவ உளவுப்பிரிவில் பணியாற்றும்போது சுமார் பத்தாயிரம் யூதர்களை இத்தாலியிலிருந்து தற்போதுள்ள இஸ்ரேலுக்கு ஜெர்மனியின் நாசிப் படைகளிலிருந்து காப்பாற்றி அனுப்பி சேர்த்தார்.. இது அவரின் பதவி காலத்தின் முற்பகுதியில் பெரும் வெற்றியாகக் கருதப்பட்டது. 1953 இல் இருந்து 1957 வரை அமெரிக்க ஜனாதிபதி ஐசனாவரின் NSC (நேஷனல் செக்குரிடி கவுன்ஸில்) யில் இருந்தார். அப்போது கர்னலாக பதவி வகித்தார். அவரின் தி டே ஆப்டர் ராஸ்வெல் புத்தகம் வெளிவந்தவுடன் இலை மறைவு காய் மறைவாக இருந்த ஏலியன் என்கவுண்டர்கள் பொதுவெளிக்கு வந்தது.

அவர் ஜெனரல் ட்ரூடோ என்பவரின் கீழ் கர்னல் ஆக வேலை செய்யும்போது.. ட்ரூடோ அவருக்கு மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைத்தார்… 1961-ம் ஆண்டு பென்டகனின் அந்நிய தொழில்நுட்பப் பிரிவின் தலைவராக ட்ரூடோ வால் நியமிக்கப்பட்டார்.. அன்றைய காலகட்டத்தில் அவருக்கு தெரியாது பின்வரும் காலங்களில் அதீத தொழில்நுட்ப வளர்ச்சி அங்கிருந்து அந்த அறையிலிருந்து தொடங்கப் போகிறது என்று…. எப்படி என்று பிறகு கூறுகிறேன், அதற்கு முன்பு இதற்கான அடிக்கோல் எங்கிருந்து தொடங்கியது என்பதை பற்றி கூற வேண்டும்.
1947 பிற்பகுதியில் ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவிற்கு மாற்றப்பட்டு ரோஸ்வெளில் டூட்டி ஆபீசராக நியமிக்கப்பட்டார். ஒருநாள் இரவு ஒயிட் ஸ்சாண்டில் உள்ள பேட்டர்சன் விமான பிரிவின் கிடங்குகளுக்கு பார்வையிடச் சென்றார். அவ்வாறு செல்லும்போது பணியில் இருந்த ஒரு காவலர் இவரின் பொது நல விசாரிப்பின் போது முக்கியமான சிலவற்றை இங்கு வைத்திருக்கிறார்கள் என்றும் நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களா என்றும் கேட்டார், தான் பார்க்காததா என்ன தான் இருக்கப் போகிறது என்று இவரும் பார்க்கச் சென்றார்… அங்கு ஐந்து சிறிய சவப் பெட்டிகளை போன்று வைக்கப்பட்டிருப்பதை காண்பித்து இவைகள்தான் அவை என்றும் அந்தக் காவலர் கூறினார். உள்ளே என்னவென்று இவரும் கேட்க காவலர் திறந்து காண்பிக்க… சுமார் பத்து பதினைந்து நொடிகள் தான் பார்த்திருப்பார்.. இரண்டாம் உலகப்போரில் எவ்வளவோ பார்த்திருந்தும் இது அதிர்ச்சியையே தந்தது…. சுமார் மூன்றிலிருந்து 4 அடி உயரம் இருக்கும் சிறிதளவு மனித உருவம் போன்று தோற்றமளிக்கும் உருவங்கள் கிடத்தபட்டிருந்தன.. இரண்டாம் உலகப்போரும் ஐரோப்பாவில் அமெரிக்க ராணுவ புலன் அமைப்பின் வேலைச்சுமையும் முடித்து திரும்பிய அவருக்கு இதைப் பற்றி அதிகமாக யோசிக்கத் தோன்றவில்லை… இதை அன்று மறந்தவர் 1961 ஆம் ஆண்டு புதிய பதவியை பற்றி ஜெனரல் ட்ரூடோ விவரிக்க அவரின் வேலையின் முக்கியத்துவம் புரிய ஆரம்பித்தது.
1947 ஆம் ஆண்டு நடந்தது ஏலியனின் UFO விபத்து என்றும் அதிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட முக்கிய பொருட்களை பாதுகாப்பதுடன் அதிலிருந்து எவ்வளவுக்கெவ்வளவு முடியுமோ அவ்வளவு தொழில்நுட்பத்தையும் தன்னகப்படுத்தி நாட்டின் ராணுவத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று இவரிடம் விவரித்தார். மேலும் சிலவற்றை ஏற்கனவே பல முக்கிய ரகசிய இராணுவக் கட்டமைப்பின் தொழிற்சாலைகளில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூற அதிர்ச்சி கலந்த வியப்புடன் கேட்டுக் கொண்டார்.
அந்த விபத்தின் மூலம் உலகத்திற்கு கிடைத்தது மைக்ரோ சிப், பிரிண்டட் சர்க்யூட் போர்ட், லேசர் கருவிகள், நைட் விஷன் காகுல்கள் மற்றும் மிக முக்கியமான ஆப்டிக் பைபர். இவைகளை வேறு ஒரு அத்தியாயத்தில் விவரிக்கிறேன்… இந்த அத்தியாயத்தில் நான் கூற வந்தது செயற்கை அறிவைப்பற்றி அது அழிவைப்பற்றியா என்று காலம் தான் முடிவு செய்ய வேண்டும்.
அந்த ஏலியன் உடல்கள் நமக்கு விளக்கத்தை தருவதற்கு பதிலாக விவரிக்க இயலாத அதிர்ச்சியை தான் தந்தது.. ஒரு ஏலியன் உடலை முழுவதுமாக பரிசோதித்தபோது மனித மூளையைப் போல் அவைகளுக்கு இல்லை மாறாக இரு பகுதி மூளையாக இருந்தது மட்டுமல்லாமல் ஜீரண மற்றும் இனவிருத்தி அங்கங்களும் இல்லாமல் இருந்தது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது… பல வருடங்கள் மிகச்சிறந்த விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுனர்களும் பெரிதும் குழம்பி கடைசியாக முடிவுக்கு வந்தது அவைகள் க்ளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட உயிரினங்கள் என்று.
குழப்பம் அதோடு நிற்கவில்லை அந்த UFO வில் நம் ஊர்திகளில் சாதாரணமாக இருக்கும் கண்ட்ரோல் பேனல் போன்று ஏதுமில்லை. முழுவதுமாக தேடியும் எந்த ஒரு ஆயுதமும் இல்லை… இதற்கான விளக்கம் அறுபதுகளின் தொடக்கத்தில் தான் கிடைத்தது… அதாவது அந்த ஏலியனின் ஒரு பகுதி மூளை தான் ஊர்தியை இயக்க பயன்பட்டது என்றும் அந்த ஊர்தியே ஒரு பகுதி உயிரினம் என்றும் நம் அன்றைய மூளைக்கு எட்டாத அதிர்ச்சி, ஆச்சரியம், குழப்பம் தரும் விளக்கம் கிடைத்தது… இதுதான் நான் இந்த அத்தியாயத்தில் விளக்க முற்படும் செயற்கை அறிவின் தொடக்கம்….
இந்த ஏலியன் கிளோன்களை உருவாக்கியது யார் என்பதற்கு அப்போது சரியான விளக்கம் கிடைக்காமல் ஒன்றை மட்டும் புரிந்து கொண்டார்கள்… இந்த ஏலியன்கள் செயற்கை அறிவு ஊட்டப்பட்டவை என்று… மிகவும் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் இவைகளுக்கு தனக்கு இடப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றுவதுதான் பிரதான குறிக்கோள். அன்பு, பாசம், பண்பு, இறக்கம் இவைளுக்கு கிடையாது. இப்போது பெரும்பாலான மனிதர்களுக்கும் இது இல்லை என்பது வேறு விஷயம்…அன்று புரிந்துகொள்ளப்பட்ட செயற்கை அறிவின் பாதிப்பு இருபத்தி ஓராம் நூற்றாண்டில் பூதாகரமாக வெடிக்க போகிறது என்று அப்போது தெரியாது.
இன்று இந்த காலகட்டத்தில்… நீங்கள் அறிந்தோ; அறியாமலோ புரிந்தோ; புரியாமலோ தெரிந்தோ; தெரியாமலோ தினசரி செயற்கை அறிவின் செயல்பாடுகளை பயன்படுத்துகிறீர்கள். மிக அதிகமாக ஸ்மார்ட் போன்களிலும், ஐ பேட் களிலும் ஸ்மார்ட் டிவி களிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் மேற்கூறிய மூன்றும் On செய்யப்படாமல் இருந்தால் உறக்கத்தில் உள்ளது என்று…. தவறு.. அதன் சுற்று வட்டத்தில் உள்ள எல்லாவித ஒலிகளையும் உள் வாங்கி அதன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்புகிறது…. இதைக் கேட்கும்போது நான் கூறுவது பைத்தியக்காரத்தனமாக தெரியும்.. இல்லை நான் கூறுவது முற்றிலும் உண்மை… இன்னும் விளக்கமாக கூற விரும்பவில்லை. இவைகள் முற்றிலும் சரியாக செயல்படுகின்றன என்றும் கூற முடியாது… தவறுகளும் அதிகமாக நடக்கின்றன.. ஒரே ஒரு உதாரணம் மட்டும் உங்களுக்கு தருகிறேன். நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனில் யூட்யூப் சேனல்களை எதைப் பார்க்கலாம் என்று தள்ளிக்கொண்டு வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளலாம், அந்த சமயத்தில் யாரோ ஒருவர் கூப்பிட நீங்கள் அந்த ஸ்மார்ட் போனை அப்படியே வைக்க அந்த சமயத்தில் அந்தத் திரையில் இருந்தது SPB அவர்களின் ஒரு பாடல் என்று வைத்துக் கொள்வோம்… நீங்கள் திரும்பி வரும் வரை அந்த திரை அப்படியே இருந்ததால் ஸ்மார்ட்போனின் AI நீங்கள் SPB பாடல்களை அதிகமாக விரும்புவர் என்று எடுத்துக்கொண்டு சில நாட்களுக்கு நீங்கள் சலிக்கும் வரை அவைகளையே முன்னிறுத்திக் காட்டும். இப்போது புரியும் என்று நினைக்கிறேன் AI யின் பாதிப்பும் பங்களிப்பும்.
ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸினால் அளவுக்கு அதிகமான நன்மைகள் உண்டு (அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் விஷம் ஆகும் என்பது கிட்டத்தட்ட AI க்கு பொருந்தும் ) இந்தத் துறை எந்த துறை என்று இல்லாமல் எல்லாத்துறைகளிலும் இப்போது செயற்கை அறிவு பயன்படுத்தப்படுகிறது… நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நடக்கிறது; நடக்கப்போகிறது; நடந்தேறப்போகிறது… சென்ற நூற்றாண்டின் கடைசி வரை செயற்கை அறிவின் பயன்பாடு இவ்வளவு தூரம் இருக்கும் என்று யாராலும் கற்பனை கூட செய்ய முடியவில்லை. மிகவும் மதிக்கத்தக்க ஆராய்ச்சியாளர்கள் கருதுவது என்னவென்றால் குறிப்பிட்ட காலத்தை வகுக்க முடியவில்லை என்றாலும் ஒரு நாள் இந்தச் செயற்கை அறிவு நம் மனித அறிவை சமன்செய்து அதற்கு மேலும் செல்லும் என்று….. இது சாதாரணமாகத் தோன்றினாலும் மறைமுக பேராபத்து இருப்பதை எத்தனை பேர்களால் புரிந்துகொள்ள முடியும்? செயற்கை அறிவு மனித அறிவை முந்தி செல்வதாக வைத்துக் கொள்வோம்… அது அதோடு நிற்கப் போவதில்லை… மிக மிக எளிதாக நம் எண்ணங்களை நடவடிக்கைகளை புரிந்து கொள்ளும். அந்தக் காலகட்டத்தில் மனிதர்களின் இயலாமையால் அவைகளின் இடத்தில் நாம் சரணாகதி ஆவோம். ஒரு சிலர் இது மிகவும் வரவேற்கத்தக்கது என்றும் கூறுவர். மருத்துவத்துறையில் மிகப்பெரிய மாற்றங்களை செயற்கை அறிவினால் கொண்டுவரமுடியும். Nano பொருட்களைப் பற்றி ஒரு சிலருக்காவது தெரிந்திருக்ககூடும்.. அதாவது எதையுமே அப்படியே மிக மிகச் சிறியதாக செய்தால் அதை நேனோ என்று கூறலாம்.. இப்போது நினைத்துப் பாருங்கள் ஒரு சிறிய எந்திரத்தை நேனோ அளவில் செய்து உடலுக்குள் செலுத்தினால் அது வெளியே உள்ள செயற்கை அறிவினால் இயக்கப்பட்டு உடலின் எந்தப் பகுதியில் குறை இருக்கிறதோ அதை எளிதாக அறுவை சிகிச்சை இல்லாமல் சில மணித்துளிகளில் சரி செய்ய முடியும். இது அறவே அறுவை சிகிச்சை முறையை நீக்கிவிடும். நினைத்துப் பார்த்தாலே எவ்வளவு பெரிய வரப்பிரசாதம் இது என நினைக்கத்தோன்றும். ஆமாம் அளவாக நம் மனித இனத்தின் கை மீறாமல் செயற்கை அறிவை பயன்படுத்தினால் நன்மைகள் பல கோடி. ஆனால் நடக்க இருப்பதுவோ பொதுமக்களிடம் இல்லை… அதிகார வர்க்கத்தை கட்டுப்படுத்தும் குழுவிடமே உள்ளது.
நடக்கப்போவது நல்லதாகவே நடக்கும் என்று நினைப்போம். பருவநிலை மாற்றங்களை மிக மிக துல்லியமாக பல நாட்களுக்கு முன்னதாகவே முன்னெச்சரிக்கையாக அறிந்து கொள்ள முடியும்.. மின்சாரத்தை எடுத்துக்கொள்ளலாம்…. செயற்கை அறிவினால் அதன் பங்கீட்டு முறை மிகத் துல்லியமாக இருக்கும் அதனால் இழப்பு மிக மிகக் குறைவாக குறைக்கப்படும். எப்போதும் மனிதர்களால் செய்யப்படும் மாடலிங்கில் நிறைய குறைபாடுகள் இருக்கும் பெரும்பாலும் பரிசோதனை முறை தான் அது… ஆனால் செயற்கை அறிவு எல்லாவித சூழ்நிலைகளையும் கருத்தில்கொண்டு மிகத்துல்லியமாக இந்த மாடலிங் வேலையை செய்யும். அதைப் பயன்படுத்தி தரை, கடல், விமான போக்குவரத்தினை மிக எளிதாக கையாளலாம். AI யின்
பயன்களைப் பற்றி கூறிக் கொண்டே போகலாம்… உங்களுக்குப் புரியும் படியாக மிக முக்கியமான மூன்று விசயங்களை எடுத்துக்கொள்ளலாம்.
சட்டம், ஒழுங்கு, அரசியல்….
கிட்டத்தட்ட செயற்கை அறிவை எல்லா இடத்திலும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம் என்று வைத்துக் கொள்வோம். அந்தக் காலகட்டத்தில் பொய்கள் மிக மிக எளிதாக வேர் அறுக்கப்படும். உங்களுக்கு தெரிந்த ஒரு காவல் துறை அத்துமீறல் நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ளுங்கள்.. இப்போதைய காலத்தில் நடப்பது போல் நடக்காது…. சம்பவம் நடக்கும் இடத்தின் எல்லா கோணங்களும் அலசப்படும், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பாதிப்பை உண்டாக்கியவர்களின் அதை விசாரித்த காவல்துறையினரின் மனநிலை அவர்களின் அந்த சம்பவத்திற்கு முந்தைய பேச்சுக்கள் அவர்கள் அதை அனுகிய கோணங்கள் எல்லாம் அலசப்பட்டு துல்லியமாக கணிக்கப்படும் இதில் வழக்கை ஜோடிப்பது என்பதே பழக்கத்தில் இருந்து எடுக்கப்படும். கிட்டத்தட்ட நூறு சதவிகித நம்பகத்தன்மை உருவாகும்.
இதே நிலைமை தான் சட்டத்திலும் நீதிமன்றங்களிலும் நடைபெறும்… பொய்மைக்கே இடமில்லாமல் போகும்.. வழக்குகளின் தேக்கம் என்பதே இருக்காது… கிட்டத்தட்ட வக்கீல்களுக்கு வேலையே இருக்காது.. எல்லா சம்பவங்களும் நேரம் காலம் தவறாமல் துல்லியமாக எடுத்து வைக்கப்படும்…
நம் நாட்டைப் பொறுத்தவரை மிக முக்கியமான நிகழ்வாக அரசியலை எடுத்துக் கொள்ளலாம். இப்போது நடைபெறுவது போல அதிகாரமும் பணமும் அரசியலை நிர்ணயிக்க முடியாது… தேர்தல் நடைபெறுவதாக வைத்துக்கொள்வோம். எந்த ஒரு வேட்பாளரை பற்றியும் அந்தக் கட்சியைப் பற்றியும் மிக மிக துல்லியமாக எல்லோருக்கும் கிடைக்கும் வண்ணம் வந்துவிடும். அவர் சார்ந்த கட்சி எப்போது தோற்றுவிக்கப்பட்டது அதிலிருந்து அவர்கள் மக்கள் தொண்டினை எங்கெங்கு எப்படி செய்தார்கள் அவர்களின் நம்பகத்தன்மை, சொத்து, மனநிலை எல்லாம் அக்குவேறு ஆணிவேராக காண்பிக்கப்படும். இவைகளை வெறும் data entry ஆக கருதவேண்டாம்… இவையெல்லாம் AI யின் அல்காரித அலசல்கள் வித்தியாசம் என்னவென்றால் டேட்டா என்ட்ரி நம்மால் ஏற்றப்படுவது… இதை ஏற்றுபவரின் அல்லது அவரை கட்டுப்படுத்துபவரின் எண்ணங்களின் பிரதிபலிப்பாகவே அது இருக்கும். ஆனால் செயற்கை அறிவின் அல்காரித அலசல்கள் தூய்மைத்தன்மை வாய்ந்தவை… ஒரு குறிப்பிட்ட நபரை பற்றி அவரின் மனநிலை, உடல்நிலை, தொடர்புகள், உறவினர்கள், நண்பர்கள் எல்லோருடைய எல்லாவிதமான AI ஆல் சேகரிக்கப்பட்ட விபரங்களை ஆய்ந்து அலசி மிகத்துல்லியமாக கொடுத்துவிடும்… இவ்வாறு இருக்கும்போது மக்களுக்கு மிகச்சரியான அரசியல்வாதியை தேர்ந்தெடுப்பது மிக எளிதாக இருக்கும். ஆனால் இப்போது இந்த காலகட்டத்தின் அவசரகதியில் பொதுவாக மக்களுக்கு ஆராய்ந்து முடிவு எடுக்கும் தன்மை மிக மிக குறைவே.. விளம்பரங்களினால் புகுத்தப்படும் எண்ணங்களின் பிரதிபலிப்பாகவே அவர்களின் முடிவு இருக்கிறது…
இவைகளெல்லாம் செயற்கை அறிவின் அளவற்ற பயன்களாக இருந்தாலும் பாதிப்புகள் ஒரு சிலவற்றை கூறுகிறேன்… ஒரு தனி மனிதனுடைய உடல்நிலை மனநிலை பொருளாதார சுமை எல்லாம் தெரிந்த AI க்கு அவருக்கு உடல் சரியில்லாத பட்சத்தில் என்னென்ன மருந்து மாத்திரைகள் எந்தெந்த அளவில் கொடுக்கவேண்டும், எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதையும் தீர்மானிக்கும் இங்கு மருத்துவரின் வேலை இல்லாமல் போகும், ஏற்கனவே கூறியது போல நேனோவினால் அறுவைசிகிச்சை போன்றவைகளும் மிக மிக குறைவான ஒத்துழைப்பு மனிதர்களாலேயே நிறைவேற்றப்படும். வக்கீல்களும் சாதாரண காவல் அதிகாரிகளும் தேவை படப் போவதில்லை தொழில்நுட்ப வல்லுனர்களின் தேவையுமில்லை.. இவ்வாறு கூறிக் கொண்டே போகலாம்.. ஏன் விவசாயம் கூட செயற்கை அறிவு கொண்ட மனிதர்களால் செய்யப்படும். கடைசியாக கணித்துப்பார்த்தால் 95% மனிதர்களுக்கு வேலை இல்லை. மீதமுள்ள ஐந்து சதவீதத்தையும் எந்தெந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கலாம் என்று செயற்கை அறிவே முடிவு செய்யும்.
உங்களை பயமுறுத்த விரும்பவில்லை இருப்பினும் எந்த அளவிற்கு இது செல்ல முடியும் என்பதை கூறி உங்கள் சிந்தனையை சீர் கோட்டில் நிற்க வைக்க முயற்சிக்கிறேன்……
ஒரு உதாரணத்திற்கு ஹிட்லரை போன்ற மாபெரும் கொடுங்கோலன் உலகை ஆள்கிறான் என்று வைத்துக் கொள்வோம், உலகில் உள்ள எல்லோரும் அடையாள அட்டை வைத்துக் கொள்வது இனி செல்லாது பதிலாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் எல்லோரும் மைக்ரோ சிப்பை அவரவர்கள் உடலில் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சட்டம் ஏற்றுகிறான்…… இந்த சட்டத்திற்கும் ஒரு பெரும் கூட்டம் அதன் பாதிப்பு, ஆபத்து எதையும் ஆராயாமல் ஆதரவளிக்கும்.
பெரும் தொற்று காலங்களில் எல்லோரையும் கண்காணிக்க மிகவும் எளிதாக இருக்கும் என்பதைப் போன்று பல காரணங்களை சட்டத்திற்கு ஆதரவாக கூறுவார்கள்…
சரி இதற்கும் செயற்கை அறிவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டீர்கள்…
வருகிறேன்….. செயற்கை அறிவு மனித அறிவை கடந்து மேலே செல்கிறது என்று வைத்துக்கொள்வோம், அவைகளுக்கு சில அல்லது பல மனிதர்கள் தேவையில்லை என்று முடிவெடுத்தால் அந்த மைக்ரோ சிப் மூலமாக நிமிடங்களில் வேண்டாதவர்களையோ இல்லை எதிர்ப்பவர்களையோ நிமிடங்களில் செயலிழக்கச் செய்யலாம் அல்லது முடித்தும் விடலாம்…. சற்று கண்ணை மூடி யோசித்துப் பாருங்கள் எமதர்மன் எங்கும் இல்லை மைக்ரோ சிப் வடிவத்தில் உங்கள் உடலிலேயே இருப்பான்!
அளவிற்கு மிஞ்சினால் செயற்கை அறிவும் அழிவே!